இஸ்லாம்:வளர்பிறையில் இருந்து சிலுவைக்கு(தமிழ்)-பிலிப் அன்சாரி


வளர்பிறையில் இருந்து சிலுவைக்கு(தமிழ்)-பிலிப் அன்சாரி

அறிமுகம்;

வளர்பிறை முஸ்லீம்களால் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது .இதன் ஆரம்பம் அரேபிய பேய்வணக்கத்தில் இருந்து உருவானது என்று Robert Morrey "இஸ்லாமிய படையெடுப்பு"என்ற புத்த்கத்தில்"சந்திரக்கடவுளின் மார்கம் "என்ற அத்தியாயத்தில் எழுதியிருந்தாலும் கூட, முஸ்லீம்களுடைய உள்ளத்தில் இந்த வ்ளர்பிறை ஒரு சிறப்பு இடத்தை பெற்றிருக்கிறது.பல்வேறு நோக்கங்களுக்காக இந்த சின்னத்தை முஸ்லீம்கள் நூற்றாண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள்.பலநாட்டு தேசியக்கொடிகளில் இந்த சின்னம் இடம்பெற்றிருக்கிறது .

பக்திப் பரம்பரை

என்னுடைய வாழ்விற்கும் வளர்பிறை ஒரு விஷேசித்த அர்த்தத்தைக் கொண்டிருந்தது.1973ம் வருடத்தில் செப்டம்பர் 6ல் இந்தியாவில் பிறந்தேன்.என் பெற்றோர்கள் எனக்கு "சையது அன்சாரி" என்று பெயர் வைத்தார்கள்.மிகவும் கட்டுக்கோப்பான, பக்தியுள்ள ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் நான் பிறந்து வளர்ந்தேன்.என்னுடைய முஸ்லீம்கள் நல்ல பக்தியுள்ள முஸ்லீம்கள் .என் சிறுவயதில் இருந்து இஸ்லாமின் எல்லாக் கொள்கைகளும் கற்றுக்கொடுக்கப்பட்டது.குர்-ஆனைப் படிக்கவும்,ஒரு முஸ்லீமுடைய கடமையை சரியாக கடைபிடிக்கவும் கற்றுக்கொடுக்கப்பட்டேன்.

ஆரம்ப கல்வி;

என் தந்தை ஒரு சிறந்த முஸ்லீமாக இருந்ததால் என்னையும் ஒரு நல்ல முஸ்லீமாக வளர்க்க விரும்பினார் . எனக்கு நல்ல கல்வியையும் அளிக்கவிரும்பினார்.பட்டணத்தில் இருந்த ஒரு அருமையான கிறிஸ்தவ பள்ளியில் என் பெயரை பதிவு செய்தார்.(அதை இன்னும் அவருடைய தவறு என்று வருந்துகிறார்) அங்கே தான் நான் இயேசுவை பற்றி கேள்விப்பட வாய்ப்புகள் கிடைத்தது.அந்தப் பள்ளியில் இயேசுவைப்பற்றி கேட்ட எதுவும் என்னை பெரிதாக கவரவில்லை .ஏனென்றால் என் தந்தை என்னைப் போதுமான அளவிற்கு தயார்படுத்தியிருந்தார்.ஒவ்வொருநாளும் என் வீட்டில் குர்ஆன் வகுப்புகள் நடந்தது.விஷேசித்த ஆசிரியர் ஒருவர் இஸ்லாம் பற்றி எனக்கு முழுவதும் கற்றுக்கொடுக்க அழைக்கப்பட்டிருந்தார்.குர்ஆன் பொய் என்று சொல்லுவதை நம்புவதாலும் ,பிரசங்கிப்பதாலும் கிறிஸ்தவர்களை நம்பக்கூடாது என்று எனக்கு கற்றுக்கொடுத்தார்கள் . அதனால் நாளடைவில் கிறிஸ்தவத்தயும் ,கிறிஸ்தாவ்ர்களையும் பற்றிய தவறான எண்ணம் என் இருதயத்தில் நிலைத்திருந்தது.

முதல் சந்திப்பு;

என் சிறுவயதும்,இளம் பிராயமும் சிந்திக்க கூடியதாக அமைந்தது.வழக்கமான இஸ்லாமிய பிராத்தனைகளும் , குரான் ஓதுதலும் அரிதாகவே என்னுடைய உள் மனிதனின் அணையாத தாகத்தை முன்னேற்றியது .நான் அதிருப்தியடைந்தேன்.இருந்தாலும் நல்ல, வைராக்கியமுள்ள முஸ்லீமாக இருந்தேன் .

நான் பத்தாவது படித்துக்கொண்டிருந்த போது ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.எனக்கு ஒரு biology ஆசிரியை இருந்தார்கள்.என்னை அதிகம் நேசிப்பார்கள்.அவர்கள் இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் .ஒரு நாள் அவர்கள் என்னிடம் " நான் இனி இந்து சமயத்தவள் அல்ல,நான் ஒரு கிறிஸ்தவள்"என்று கூறினார்கள் .அவர்கள் பேசிய பலகாரியங்களில் இரண்டு மட்டும் என் மனதில் பதிந்து விட்டது ."நான் இயேசுவை தரிசித்தேன் , அவர் என்னை சேற்றிலிருந்து தூக்கினார்". தன்னுடைய மதத்தையும் ,தெய்வத்தையும் விட்டு வேறு மதத்திற்கு சென்றதைக் குறித்து நான் அவர்களிடம் விவாதித்தேன்.நான் கேட்ட பல கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.குர்ஆனையும் ,பைபிளையும் ஒப்பிட்டு எது உண்மை என்று கேட்டேன் . அவர்கள் ஒரு புதிய கிறிஸ்தவராய் இருந்தபடியினால் திருப்தியான பதிலை எனக்கு தர முடியவில்லை. கடைசியாக அவர்கள் சொன்னார்கள் "அன்சாரி நான் சொன்ன எதையும் இப்பொழுது நீ புரிந்து கொள்ள மாட்டாய்,ஆனால் நீ எல்லாவற்றையும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு நாள் உன் வாழ்க்கையில் வரும் அதுவரை நான் உனக்காக ஜெபித்துக்கொண்டிருப்பேன்"

உண்மையாக அவர்கள் சொன்ன எதையும் நான் புரிந்துகொள்ளவில்லை .ஆனால் எனக்காக ஜெபித்தார்கள் என்று நம்புகிறேன் .

நான் இக்கட்டுக்குள் அடைக்கப்பட்டேன் ,அதனால் பார்க்க முடிந்தது .

கிறிஸ்துவை பற்றி தனிப்பட்ட விதத்தில் அறிந்து கொள்ள னடந்த முதல் சந்திப்பு முடிந்தது ,நாட்கள் கடந்தது ,அதன் பிறகு பலர் என்னிடத்தில் வந்து சுவிஷேசத்தை பகிர்ந்துகொண்டார்கள்.இப்படி கையில் கைப்பிரதியுடன் குழுவாகவோ அல்லது தனியாகவோ வரும் கிறிஸ்தவர்களை நான் குழப்பி அல்லது பயமுறுத்தி அனுப்பிவிடுவேன்.

இரண்டு வருடங்கள் கழித்து என் குடும்பத்தில் ஒரு பெரிய பிரச்சனை எழும்பியது .என் அப்பாவும்,அம்மாவும் விவாகரத்து செய்யும் நிலையில் இருந்தனர்.இருவரில் யாருடன் வாழவேண்டும் என்பதை நான் தேர்வு செய்துகொள்ள விடப்பட்டேன்.என் தந்தயைக் காட்டிலும்

என் தங்கைக்கும்,அம்மாவிற்கும் என்னுடைய உதவி தேவைப்பட்டபடியினால் நான் அவர்களுடன் இருக்க முடிவு செய்தேன்.என் எதிர்காலம் குறித்தும், கைவிடப்பட்ட என்னுடைய குடும்பத்தைக் குறித்தும் மிகவும் கவலையொடு இருந்தேன் .நான் ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்று சிறு வயதிலிருந்து ஆசைப்பட்டேன் .அந்த ஆசை இப்பொழுது தகர்ந்து போனதாக காட்சியளித்தது .

"

அன்சாரி,இயேசுவை நம்பிப்பார்"

1990-ம் வருடம் டிச்ம்பர் 24-ம் தேதி அது என் அப்பாவுக்கும்,அம்மாவுக்கும் இடையே பெரும் சண்டை.வாக்குவாதத்தில் தொடங்கி பிறகு கடுமையாக மாறியது.என்னுடைய நூலகத்தில் இருந்து வீடுதிரும்பிய நானும் வாய்த்தகராறில் ஈடுபட்டேன் .மிகவும் வருத்தத்தோடு இரவு 8.30 மணியளவில் என்னை கொஞ்சம் இலகுவாக்கிக்கொள்ள அருகிலுள்ள பூங்காவிற்கு சென்றேன்.

நான் அங்கே அமர்ந்திருந்த போது பல காரியங்கள் என் மனதை கடந்து சென்றது. நம்பிக்கையற்ற எதிர்காலாம் மற்றும் குடும்ப பிரச்சனைகள் என்னை அழுத்திக்கொண்டிருந்தது.தற்கொலை செய்யகூடிய நிலைக்கு வந்து விட்டேன்.

அந்த சரியான தருணத்திலே "அன்சாரி இயேசுவை நம்பிப்பார் "என்று எனக்கு பின்னாலிருந்து வந்த ஒரு சத்தத்தை கேட்டேன்.அது ஒரு ஆணின் குரல,நம்பிக்கையூட்டுகிற மென்னையான அமைதிப்படுத்துகிற குரலாக இருந்தது.அந்த குரல் யாருடையது என்பதை பார்க்கத்திரும்பினேன் .ஆனால் ஒருவரையும் காணவில்லை .மீண்டும் என்னுடைய சொந்த சிந்தனைகளில் மூழ்க ஆரம்பித்தேன் .மீண்டும் அந்த சத்தம் அதே வார்த்தைகளை பேசியது. ஒரு வேலை என் மனபிரம்மையாக இருக்கலாம் என்று நினைத்தேன். மறுபடியும் அந்த சத்தத்தைக்கேட்டேன்.அந்த சத்தத்திற்கு ஒரு தெய்வீக சுருதி இருப்பதை அப்பொழுதுதான் உணர்ந்தேன் . என்னுடைய எல்லா குழப்பங்களும் மெல்லிய காற்றில் மறைந்து போயிற்று.அந்த சத்தத்தைப்பற்றி ஆராயத் தொடங்கினேன்.அந்த சத்தத்தை பற்றிய பலவிதமானக் கேள்விகள் என் மனதில் எழும்பியது .என்ன விதமான சத்தம் இது? யார் என்னோடு பேசிகிறார்கள் ? ஒரு முஸ்லீமான நான் ஏன் கிறிஸ்தவக்கடவுளான இயேசுவை நம்பவேண்டும்?இயேசுவை நம்புவது தவறொன்றும் இல்லை என்று என் இருதயத்தில் ஒரு சத்தம் பேசும் பொழுது , என்னுடைய மத பக்தி என்னை இழுத்துக்கொண்டிருந்தது.யாரிடம் போவது என்று முழுவதும் குழம்பினேன்.

அந்த சந்தர்பத்தில, இரண்டு வருடங்களுக்கு முன் என்னிடத்தில் தன்னுடைய சாட்சியை பகிர்ந்துகொண்ட அந்த ஆசிரியையை நினைவு கூர்ந்தேன் .என்னுடைய எல்லா கேள்விக்கும் பதில் அளிக்க அவர்களே சிறந்த நபர் என்று எண்ணி சுமார் இரவு 9.30க்கு அவர்களுடைய வீட்டுக்கு சென்றேன் .அவர்கள் என்னை சந்தோஷமாக வரவேற்றார்கள். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் நான் போய் அமர்ந்தேன் . என்ன பிரச்சனை என்று அவர்களே கேட்டார்கள் .அவர்களுக்கு முழு காரியத்தையு நான் சொன்னேன் . புன்னகையோடு அவர்கள் ,கர்த்தர் என்னை தம்முடைய அன்பை வெளிப்படுத்துவதற்கு தெரிந்துகொண்டுள்ளார் என்று சொன்னார்கள்.பிறகு சுவிஷேசத்தை விளக்கி கூறினார்கள் .அவர்கள் பேசும் போதே ஒரு தெய்வீக சமாதானம் என் உள்ளத்தை நிறைத்தது.

என் முதல் கிறிஸ்தவ பை அனுபவம் ;

அதற்கு அடுத்த நாள் கிறிஸ்துமஸ் தினமாயிருந் தது.அவர்கள் என்னை சபைக்கு அழைத்தார்கள் .சபைக்கு சென்ற நான் ஒரு மூலையில் கடைசி இருக்கையில் போய் அமர்ந்தேன் .எனக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இறுதியாக போதகர் எழுந்து இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரிக்கும்படிக்கு இந்த உலகத்திற்கு வந்தார் என்று கிறிஸ்துமஸ் செய்தியை பகிர்ந்து கொண்டார்கள் . தேவனுடைய வார்த்தை என் ஆத்துமாவைத் தொட்டது.அவர் என் இருதயத்தை இலேசாக்குவதை உணர்ந்தேன் ,பிரசங்க நேரத்தில் தேவனுடைய சமாதானத்தையும் உணர்ந்தேன் .கடைசியாக அர்பணிப்புக்காக அழைக்கப்பட்ட போது ஆண்டவருக்கு என் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்க நான் முதல் ஆளாக எழும்பினேன் .

கிறிஸ்துமஸ் சிறப்பு வாய்ந்தத , இல்லையா என்பது எனக்கு தெரியாது.டிசம்பர் 25 இயேசு பிறந்த சரியான நாள் இல்லை என்று சிலர் சொல்லுகின்றனர் . ஆனால் எனக்கு அது எப்பொழுதும் ஒரு சிறப்பான நாள் தான் .ஏனென்றால் கிறிஸ்துமஸ் தினத்தன்று இயேசு என் உள்ளத்தில் பிறந்தார்.

உபத்திரவம்

தேவனுக்கு

என்னுடைய வாழ்வைக்கொடுத்தது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.ஆனால் அதை என்னால் முடிந்த அளவு இரகசியமாக வைக்கும்படி என்னுடைய ஆசிரியை எனக்கு அறிவுரை கூறினார்கள் .என்னுடைய பெற்றோர் ஒரு வேளை அதை விரும்ப மாட்டார்கள் என்று கூறினார்கள். இயேசு என் உள்ளத்தில் வந்த பிறகு எந்த விதத்திலும் என்னுடைய சூழ்நிலைகள் மாறவில்லை .மாறாக அவை மேலும் மோசமானது .ஆனால் என்னுடைய குழப்பம் நீங்கியது ,அவர் என்னுடைய எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவார் என்று என் இதயத்தின் ஆழத்தில் அறிந்திருந்தேன் .

இந்த நேரத்தில் என்னுடைய குடும்பம் பிரிந்தது

,என் அப்பா என் அம்மாவை விவாகரத்து செய்துவிட்டார் .நான் என் தாயுடன் இருக்க முடிவு செய்தபடியினால் என் தந்தை என்னை முழுவதும் கைவிட்டுவிட்டார் . நாட்கள் கடந்த போது என் மாற்றத்தை என் தாய் அறிந்தார்கள்.தேவன் என்னை ஞானஸ்தானம் எடுக்கும்படி வழி நடத்தினார் . நானும் அதற்கு கீழ்ப்படிந்தேன்.இதையும் அறிந்த போது என் தாய் என்னை மீண்டும் இஸ்லாமுக்கு திரும்பவைக்க எவ்வளவு முயற்சி செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்தார்கள் .என் உறவினர்கள் மற்றும் பள்ளிவாசலிலும் இது அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் அவர்கள் என்னை வந்து பார்க்கலானார்கள் .என்னுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளும் பள்ளிவாசல் நிர்வாகம் கண்காணிக்க ஆரபித்தனர் . நான் தொடர்ந்து அவர்களின் கண்காணிப்பில் இருந்த போதும் நான் கவலைப்படவில்லை, தேவனுடைய தெய்வீக பாதுகாப்பு என் மீது இருப்பதை உணர்ந்தேன் .

என் தாய் எனக்கு எதிராக சூனியமும் செய்து பார்த்தார்கள்

.அவர்கள் ஒரு சூனியக்காரியிடம் செறார்கள் .கொஞ்சம் நேரத்துக்கு பிறகு ஏதோ மிகப்பெரிய சக்தி என்னைப் பாதுகாப்பதாகவும், வேறு எந்த சக்தியும் என்னை நெருங்க முடிவதில்லையென்று சொல்லி எனது அம்மாவை அனுப்பிவிட்டாள் அந்த சூனியக்காரி.(சில வருடங்கள் கழித்து நான் பிரசங்கித்துக் கொண்டிருந்த போது என் தாய் முதல் முறையாக சபைக்கு கடந்து வந்த நேரத்தில் இதை தெரிவித்தார்கள் ,தேவன் தன்னுடைய மக்களை பாதுகாக்கிறார் என்ற வசனங்களை அவர்களுக்க்கு காண்பித்தேன்.அதன்பிறகு அவர்கள் தேவனிலே விசுவாசம் வைத்தார்கள் .என் தாய்க்கும் ஞானஸ்தானம் கொடுக்கும் கிருபையை கர்த்தர் எனக்கு தந்தார்.)

ஒரு முறை என்னுடைய உறவினர்களில் ஒருவரும் , அவருடைய நண்பர்கள் குழுவும் என்னைப் பிடித்து என் தொண்டையில் கத்தியை வைத்து சொன்னார்கள் "நீ இஸ்லாமுக்கு திரும்பி விடு அல்லது நான் உன் தொண்டையை அறுத்து விடுவேன் ". தேவன் அந்த நேரத்தில் ஒரு நபரை அனுப்பி என்னை காப்பாற்றினார். அந்த மனிதன் அவர்களை துரத்தி விட்டார் .நான் சந்தித்த உபத்திரவங்களை பற்றி சொல்லிக்கொண்டே போகமுடியும். ஆனால் சுருக்கமாக சொல்லப்போனால் இஸ்லாமிலிருந்து இயேசுவிடம் வரும் மக்களுக்கு வாழ்க்கை சுலபமாக இருப்பதில்லை.

இந்த நேரத்தில் நான் விலங்கியல் பாடத்தில் இளநிலை பட்டபடிப்பை படித்துக்கொண்டிருந்தேன் . என் தாயரையும்,சகோதரியையும் பராமரிக்கவேண்டிய பொறுப்பு எனக்கு இருந்த படியினால் மாலை நேரங்களில் வேலையும் செய்து வந்தேன் .ஒவ்வொறு நாளும் மூன்று மணி நேரங்களுக்கு மேல் உறங்க முடியாத கடினமான சமயமாய் அது இருந்தது. என்னுடைய படிப்பு மற்றும் என் குடும்பத் தேவைகளுக்காக நான் மிகவும் கஷ்டப்பட வேண்டியதாயிருந்தது.ஆனால் தேவன் என்னோடிருந்து ,எல்லாவற்றையும் செய்ய தேவையான பலத்தை அளித்து வந்தார்.நான் படித்துக்கொண்டிருந்த இடத்தில் இருந்த இஸ்லாமிய நண்பர்கள் என்னுடைய வாழ்வை மிகவும் கடினமாக்கினார்கள் .ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே போனது.இறுதியாக உபத்திரவங்கள் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் நான் என் படிப்பை கைவிட வேண்டியதாயிற்று .

அழைப்பு

இந்த சமயத்தில் தேவன் என்னை முழுநேர ஊழியத்திற்கு அழைப்பதை உணர்ந்தேன். தேவனுடைய ஊழியத்திற்கு என்னை தயாராக்குவதற்காக பெங்களூரில் உள்ள ஒரு வேதாகமக் கல்லூரியில் போய் சேர்ந்தேன்.தேவன் அவை எல்லவற்றிலும் என்னோடிருந்தார் .எனக்கு எந்த பொருளாதார பிண்ணனியும் இல்லை. என்னுடைய கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்கும் யாரும் இல்லை. ஆனால் தேவனே என்னுடைய எல்லாத் தேவைகளையும் அற்புதமாக சந்தித்தார்.

கல்லூரியில் முதன்மையானவனாகவும் சிரந்த மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற கர்த்தர் எனக்கு உதவிசெய்தார்

. அதற்காக எனக்கு தங்க பதக்கமும் வழங்கப்பட்டது.கல்லூரியின் மற்ற செயல்திறன்களிலும் சிறப்பாக செயல்பட கர்த்தர் உதவினார் .

நஷ்டமென்று கருதுகிறேன்

நான் வேதாகமக்கல்லூரியில் இருந்த போது,பல வருடங்களுக்கு முன் எங்களை விட்டு பிரிந்த என் தகப்பனார் என்னை தேட ஆரம்பித்து இறுதியாக என்னை கண்டு பிடித்தார் .என் விடுமுறையில் நான் என் சொந்த ஊருக்கு சென்றேன். புதிதாக கட்டப்பட்ட தன்னுடைய வீட்டிற்கு என் தந்தை என்னை அழைத்து சென்றார்.வாவ்!!! அது மிகவும் அழகான,பெரிய, விசாலமான மாளிகையாக இருந்தது.அது தான் என் சிறுவயது கனவாக இருந்தது.

எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது

.என் தந்தை என்னோடு பேச விரும்பினார் .நான் கிறிஸ்தவனாக மாறியது அவருக்கு தெரியவந்தது. நான் கிறிஸ்தவத்தை விட்டு இஸ்லாமுக்கு திரும்பி வந்தால் அவருடைய எல்லா சொத்துக்களையும் ,மாளிகையையும் கொடுப்பதாக சொன்னார் .மேலும் மருத்துவ கல்லூரியில் சேர்த்தி விடுவதாகவும் கூறினார் .

அவர் சொன்னார்

"நீ கிறிஸ்தவத்தை விட்டுவிட்டு இஸ்லாமிக்கு திரும்பினால் நான் உனக்கு எல்லாவற்றையும் கொடுப்பேன் ".நான் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினேன். எனக்கு முன்னாக அளிக்கப்பட்ட ஒரு சிறந்த பரிசாக அவை இருந்தது.சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு , அற்பமான வேலைகளை செய்து குறைந்த வருமானத்தை பெற்று வந்த எனக்கு அது ஒரு அரிய வாய்பு என்பதை உணர்ந்தேன்.

நான் அப்படியே ஜெபித்துக்கொண்டிருந்த போது கர்த்தர் என்னொடு பிலிப்பியர்

3;7 வசனத்தை கொண்டு பேசினார்."எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னிடம் வருவாயா? எல்லாவற்றையும் எனக்காக நஷ்டமென்று கருதுவாயா?"ஜெப நேரம் முடிந்தவுடன் நான் என்னுடைய முடிவை எடுத்திருந்தேன் .நான் இயேசுவை மட்டுமே பின்பற்றுவேன் அவரிடம் இருந்து யாரும் என்னை பிரிக்க முடியாது என்று நான் என் தந்தையிடத்தில் சொன்னேன்.

இன்றுவரை நான் எடுத்த அந்த முடிவை அவர் புரிந்து கொள்ளவில்லை . என்னிடத்தில் அவர் மிகவும் கோபம் அடைந்தார் .பள்ளிவாசலில் இருந்து ஆட்களை அழைத்து ஆலோசனைக்கூட்டம் நடத்தினார் . அவருடைய எந்த சொத்தும் எனக்குரியதல்ல என்று ஒரு பத்திரம் எழுதினார்.நான் இஸ்லாமை விட்டு விட்டபடியினால் இனி அவருடைய மகனும் இல்லை என்று அவர் சொன்னார் .அது எனக்கு மிகுந்த வேதனையாய் இருந்தது.

ஆனால் இன்றைக்கு கர்த்தர் என் தந்தையோடு கூடிய என் உறவை புதுபித்திருக்கிறார் . அவர் என்னுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைப் பார்க்கிறார் .அவர் தன்னுடைய இரண்டாவது மனைவியோடு சமாதானமாக இல்லை . ஆனால் நான் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறார்.நான் அடிக்கடி அவரை அழைத்து பேசுகிறேன் .ஒவ்வொரு முறை நான் அவரை அழைக்கும் போதும் அவர் சொல்லுவது, என்னிடத்தில் ஏதோ ஒன்று மிகவும் வித்தியாசமாயிருக்கிறது .அந்த வித்தியாசம்" இயேசு "என்று நான் பல தருணங்களில் சொல்லியிருக்கிறேன். இது வரை ஒரு வாய்ப்பையும் வீணாக்கியது இல்லை .என்னுடைய தங்கையும் இப்போழுது என் தாயைப்போலவே விசுவாசியாக மாறியிருக்கிறாள் . என் தகப்பனாரை உங்கள் ஜெபத்திலே நினைத்துக்கொள்ளுங்கள்.

அவருடன் இருப்பது ஆசீர்வாதமானது

இதற்கு பிறகு கர்த்தர் என்னை பல அருமையான பாதைகளில் நடத்தினார்.அந்த பாதைகள் அவ்வளவு எளிதாக இல்லை ஆனால் அவர் என்னொடு இருந்தார் .என்னுடைய திருமணம் மற்றொரு பெரிய சாட்சி.கர்த்தர் எனக்கு அருமையான மனைவியையும் ,அழகான இரண்டு பெண் குழந்தைகளையும் கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறார். அநேக சவால்கள்,உபத்திரவங்கள்,எதிர்ப்புகள் .கடுமையான சமயங்கள் ஆனால் தேவன் ஒரு போதும் என்னை கைவிடவில்லை .

துக்கம்

,பசி, துன்பம்,வறுமை,வேதனை ,தரித்திரத்தின் பாதைகளின் ஊடே கடந்து செல்ல தேவன் என்னை தெரிந்து கொண்டார்."கிறிஸ்தவனாய் மாறினதால் "அநேக முறை என் பெற்றோர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டேன், வீட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்ட பலநேரங்களில் ரோட்டு ஓரங்களிலும்,சபைகளிலும் படுத்து உறங்கியிருக்கிறேன் .ஆனால் இன்று தேவன் என்னை உயர்த்தியிருக்கிறார்.என் வாழ்க்கையில் வருடைய ஆசீர்வாதங்களை உணருகிறேன் .

எனக்காக தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள்

,கர்த்தர் தாமே என்னை எதிர்காலத்தில் அவருடைய மகிமைக்காகவும் ,அவருடைய இராஜ்ஜியத்தை விரிவாக்கும் பணியில் ஒரு கருவியாக பயன்படுத்துவாராக.

English - http://unmaiadiyann.blogspot.com/2007/12/from-crescent-to-cross-philip-ansari.html

அந்தப்பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் பழக்கம் உடையவர்




http://unmaiadiyann.blogspot.com/2008/05/blog-post_31.html

சென்னை - Chennai-Madras -ஒரு பயோ கிராபிகல்ஸ்

 நகர வரலாறு:
Parrys Corner in 1890 AD முன்னூறு வருட சரித்திரம். கடலோர கிராமங்களுக்கிடையில் கிழக்கிந்தியக் கம்பெனியினர் இறங்கி கி.பி. 1639ல் விஜயநகரின் கடைசி அரசர் சந்திரகிரி அளித்த நிலத்தில் மதராஸ்பட்டினத்தை ஸ்தாபித்தனர். 1644ல் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை நிறுவிய பின்னர் அதைச் சுற்றிலும் திட்டமில்லாமலே மெட்ராஸ் வளர ஆரம்பித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ்காரர்களின் பிடியில் முழுமையாக தென்னிந்தியா வந்த பின் மெட்ராஸ் அவர்களது நிர்வாக மற்றும் வியாபார தலைநகரானது.

தொடர்ந்து மிக வேகமாக வளர்ந்து இந்தியாவின் நான்கு பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. மெட்ராஸ் என்று உலகம் முழுவதும் பரிச்சயமான பெயர் 1996ல் சென்னை என்று அதிகார பூர்வ பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகர் அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த சென்னப்ப நாயக்கரின் நினைவாக இப்பெயர் அமைந்தது.

நகர வழக்கங்கள்:
குளிர்காலத்தில் கூட 20 டிகிரி செல்சியஸுக்கு குறைவதில்லை. கடல் காற்றின் ஈரப்பதத்தால் கசகசப்பு இருந்தாலும் மா‍லை 4 மணிக்கு ‍மேல் கடலில் இருந்து நிலத்திற்கு வரும் காற்று இரவின் வெம்மையை வெகுவாக குறைக்கிறது. வருடம் முழுவதற்கும் வேனிர்கால உடைகளே போதுமானவை.

நாட்டின் பெரிய மெட்ரோக்களில் ஒன்று, ஆனாலும் கட்டுப்பெட்டித்தனமான நகரம் என்றிருந்த பெயர் தற்போது மாறி வருகிறது. இங்கு பேசப்படும் தமிழ் மற்ற இடங்களில் வாழும் தமிழர்களுக்கே புரியாத அளவு மொழி மாற்றம் அடைந்துள்ளது. ஆனால் இந்த பேச்சு வழக்கு சமூகத்தின் அடிமட்ட மக்களிடம் மட்டுமே பரவலாக உள்ளது.

நகரின் அமைப்பு:
நகரம் வடக்கு தெற்காக முதலில் விரிவடைந்தது, தற்போது மேற்கில் விரிவடைந்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே அகலமான சாலைகளைக் கொண்ட நகரமாக இருந்தாலும் நகரின் வளர்ச்சியினால் மிகுந்த நெரிசலும் புகை மாசும் நிறைந்த நகரமாக இருக்கிறது.

50களில் முக்கிய சாலையான அண்ணா சாலையில் (மவுண்ட் ரோடு) கட்டப்பட்ட 14மாடி கட்டிடமே இன்றும் சென்னையின் அடையாளம். தற்போது தான் அதை விட அதிக மாடிகள் கொண்ட கட்டிடங்கள் கட்டபட்டு வருகின்றன.


முக்கிய இடங்கள்:
மெரினா கடற்கரை:
உலகின் இரண்டாவது அழகிய கடற்கரை, தற்போது அளவுக்கதிகமான கூட்டத்தாலும், பிளாஸ்டிக் குப்பைகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் 5 கி.மீ. நீளத்திற்கு மிக லேசான வளைவுடன் இருக்கும் கடற்கரையின் அழகு அவற்றையும் மீறி வசீகரிக்கிறது. இதன் வடகோடியில் அறிஞர் அண்ணாவின் சமாதி உள்ளது.

மாமல்லபுரம் (மகாபலிபுரம்):
சென்னையிலிருந்து தெற்கு கடற்கரையோர சாலையில் சுமார் 60கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பல்லவ காலத்தில் செய்யப்பட்ட அற்புதமான பழங்காலச் சிலைகள் இந்த சிற்றூர் முழுதும் காணலாம். ஊர் முழுதும் பல்வேறு சிலை செய்யும் ஸ்தாபனங்கள் முளைத்துள்ளன. சிறப்பான சிற்பக் கலைஞர்கள் நிறைந்த ஊர். மாமல்லபுரம் செல்லும் சாலையில் பல்வேறு பொழுதுபோக்கு பூங்காக்கள் (Theme Parks) திறக்கப்பட்டுள்ளன.

வண்டலூர் மிருகக்காட்சி சா‍லை:
நகரின் மையத்தில் முன்பு அமைந்திருந்த மிருகக்காட்சி சாலை தற்போது நகரின் வெளியே பரந்த இடத்தில் மிருகங்கள் இயற்கையாக உலவும் வன்னம் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் கண்டு களிக்க ஏற்ற இடம்.

வள்ளுவர் கோட்டம்:
திருவள்ளுவரின் பெயரால் தமிழக அரசு அமைந்த கூடம். தேர் போன்ற வெளிப்புற அமைப்பு காணத்தக்கவை, உள்ளே திருக்குறளின் அனைத்து அதிகாரங்களும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.

 

மனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது

மனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது
ஆப்கானிஸ்தான் அதிபர் சொல்கிறார்


குவைத், ஏப்.30-

ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாயை கொல்ல நடந்த முயற்சியில் அவர் தப்பி பிழைத்தார். அவர் நேற்று குவைத் நாட்டுக்கு சென்றார். அந்த நாட்டில் இஸ்லாமிய பொருளாதார பேரவையின் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமக்குள்ளேயே எதிரிகள் இருக்கிறார்கள். சிலர் மதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். மனிதர்களை கொல்வதற்கு துன்புறுத்துவதற்கும் நம் மதத்தை பயன்படுத்துகிறார்கள். கல்வி அறிவு பெறுவதற்கு பதிலாக அவர்கள் அழிவு வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்காக முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட்டு போராடவேண்டும்.

இவ்வாறு கர்சாய் கூறினார்.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=409627&disdate=4/30/2008

சுஜாதா குறித்து ஜெயமோகன்

சுஜாதா குறித்து ஜெயமோகன்
 
.
 
.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா குறித்து தன்னுடைய இணையதள பிளாக்கில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருப்பதாவது:

பல நட்சத்திர எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்களெல்லாம் நிகழ்ச்சிகளாலும் கதைமாந்தர்களாலும் தான் வாசகர்களைக் கவர்ந்தவர்கள். மொழியின் நுண்ணிய விளையாட்டுகளாலேயே முற்றிலும் மனதை கவர்ந்தவர் சுஜாதா.மொழியில் புறவுலகை உருவாக்க முயலும் எந்தப் படைப்பாளியும் புறக்கணித்துவிட முடியாத முன்னோடி சுஜாதா.

.

சுஜாதாவின் முதல் கட்ட சாதனை அவரது நாடகங்களிலேயே புகழ்பெற்ற அமெரிக்க யதார்த்த நாடகங்களுக்கு பல வகையிலும் நிகரானவை அவை. யதார்த்த நாடகங்களுக்கு உரையாடலே உயிர். சுஜாதா உரையாடல் விற்பன்னர். சுஜாதாவை தமிழின் மிகச் சிறந்த சிறுகதையாசிரியர்களின் வரிசையிலேயே நான் என்றும் வைத்திருக்கிறேன். அனைத்தையும் சுருக்கிச் சொல்லும் அவரது பாணியும் காட்சி சித்தரிப்பின் ஜாலமும் சிறுகதைக்கு சரியாகப் பொருந்தி வருபவை. பிரமிப்பூட்டும் அவதானிப்புத்திறன் கொண்டவர் அவர். மொழியின் அனைத்து சாத்தியங்களையும் இயல்பாகத் தொட்டுவிடும் தேர்ச்சி அவருக்கு இருந்தது.
 

புதிய தமிழ்மணத்தில் எனக்கு ஏற்படும் பிரச்சனைகள்

மதிப்பிற்குரிய தமிழ்மண நிர்வாகிகளுக்கு கடந்த ஒரு வாரமாக என் தளத்தை தமிழ்மணத்தில் பிங் செய்யும் பொழுது புதிய தமிழ்மண பக்கங்களில் என் பதிவுகள் காட்டப்படுவது இல்லை.
 
ஆனால் பழைய தமிழ்மணப் பக்கங்களில் தெரிகிறது.நான் தங்களுக்கு தனிமடல்கள் அனுப்பியுள்ளேன்.ஆனால் என் குறைபாடு இதுவரை நீங்க வில்லை.
 
 
தயவு செய்து தமிழ்மண நிர்வாகிகள் இந்த குறையை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
இப்படிக்கு
 
உங்கள் இஸ்லாம்

அபுமுஹை அவர்களின் பாதை மாறிய பயணங்கள்!!!!!!!!!!!!!

அபூமுஹை அவர்களுக்கு உமர் பதில்: பாதை மாறிய பயணங்கள்

அபூமுஹை அவர்களுக்கு பதில்: பாதை மாறிய பயணங்கள்

மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு நேர்க்காணலில் "இஸ்லாமை விட்டு வெளியேறி, வேறு மதத்தை பரப்புகிறவனை, இஸ்லாம் சட்டப்படி  கொல்லவேண்டும்" என்று அவர் சொன்ன கருத்து சரியானதா என்று கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் ( Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி:யார் தேசத் துரோகி?)  இதற்கு அபூ முஹை அவர்கள், ஜாகிர் நாயக் அவர்கள் சொல்வது சரியானது தான் இஸ்லாமில் இப்படித்தான் சட்டம் என்று ஒரு கட்டுரையை எழுதினார் ( மதம் மாறினால் மரண தண்டனை-1) . இதற்கு நான் மறுபடியும் ஒரு மறு உத்தரவு எழுதினேன். அபூ முஹை அவர்களுக்கு உமர் பதில்: * Conditions Apply (* நிபந்தனைகளுக்கு உட்பட்டது) .

நான் சொல்லாத விவரத்தைச் சொன்னதாக, அபூமுஹை அவர்கள் கற்பனை செய்துக்கொண்டு சில விவரத்தைச் சொல்லியுள்ளார்.

இந்த கட்டுரையில் அவர் சொல்லும் குற்றச்சாட்டு:

அரசியல், ஆட்சி, இராணுவம் போன்ற நாட்டை ஆளும் சட்டம் எல்லாம் காபிர்(Non-Islam) நாடுகள் தான் உருவாக்கின, இஸ்லாம் அதை சொல்லவில்லை என்று நான் சொன்னதாக அவர் சொல்கிறார். இதை அவர் எங்கேயிருந்து எடுத்தார் என்பதை அவரிடம் தான் கேட்கவேண்டும்.

இனி அவர் என்ன எழுதினார் என்பதை கவனிப்போம்.

 

அபூமுஹை அவர்கள் எழுதியது:

மதம் மாறினால் மரண தண்டனை-3
Source:
http://abumuhai.blogspot.com/2008/05/3_12.html 

முஸ்லிம்கள் இஸ்லாம் மார்க்கத்தின் சட்டங்களைக் கூறும் போது, அது இஸ்லாத்தின் சட்டமில்லை காஃபிர்களின் சட்டம் என்று சில பிற மத நண்பர்கள் கூறுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை அரசியல், ஆட்சி, இராணும் இன்னும் இவை போன்ற நாட்டைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான சட்டங்கள் அனைத்தும் இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை. காஃபிர்களே இச்சட்டங்களை வகுத்திருக்கின்றனர், இவையெல்லாம் காஃபிர் சட்டங்கள் என்பதால் இவற்றிலிருந்து முஸ்லிம்கள் உதாரணம் சொல்லக்கூடாது என்பது இஸ்லாத்தை விமர்சிக்கும் சிலரின் கூற்று.


அருமையான நண்பர் அபூ முஹை அவர்களே, நீங்கள் சொன்ன விவரங்கள் என் கட்டுரையில் எந்த இடத்தில் உள்ளது சிறிது விளக்குங்கள்.

காபிர் நாடுகள் தான் முதல் முதலில் அரசியல், ஆட்சி, இராணுவம்  போன்ற சட்டத்தை உருவாக்கின என்று நான் சொல்லியுள்ளேனா?

இஸ்லாம் இப்படிப்பட்ட சட்டத்தை உருவாக்கவில்லை அல்லது சொல்லவில்லை என்று நான் எங்கு சொல்லியுள்ளேன்?

ஏன் உங்கள் கட்டுரைகளை படிக்கும் அப்பாவி மக்களை (முஸ்லீம்களை) திசைத்திருப்புகிறீர்கள்.


 
அபூமுஹை அவர்கள் எழுதியது:

இவர்கள் எங்கிருந்து இவ்வாறு புரிந்து கொண்டார்கள்! அதனால் கீழ்கண்டவாறு விமர்சனத்தை எழுப்புகிறார்கள்.


11. காபிர்களின் (Non-Islam) சட்டத்தோடு, இஸ்லாம் சட்டம் சம்மந்தம் கலந்தது எப்படி?

பொதுவாக, இஸ்லாமியர்களின் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்து அரசியல் சாசன மற்றும் இதர சட்டங்களை விட இஸ்லாமிய சட்டமே மேலானது, இதில் மட்டுமே மனிதர்களை நல்வழிப்படுத்தும் சட்டங்கள் உண்டு.

ஆனால், எப்போதெல்லாம், இஸ்லாமின் ஒரு சில கொடுமையான சட்டத்தை நியாயப்படுத்த இஸ்லாமிய அறிஞர்கள் விரும்புவார்களோ, அப்போதெல்லாம், தயக்கமே இல்லாமல் "காபிர்களின்" சட்டத்தை மேற்கோள் காட்டவோ அதைப்பற்றி பேசவோ தயங்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, இஸ்லாமிய சட்டத்தோடு சம்மந்தம் இல்லாத காபிர் சட்டத்தை ஒப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒப்பிடுதலைத் தான் --- அவர்கள் செய்துள்ளார்கள்.

நான் மேலே சொன்ன தலைப்பே மிகவும் தெளிவாகச் சொல்கிறது. அதாவது, காபிர்களின் சட்டத்தோடு இஸ்லாமிய சட்டம் எப்படி சம்மந்தம் கலந்தது என்றேன்.காபிர்களின் சட்டம் தான் முதல், இஸ்லாமிய சட்டம் தான் அடுத்தது என்று நான் சொன்னேனா? மறுபடியும் ஒருமுறை படித்துப்பாருங்கள்.

அதாவது, காபிர்களின் சட்டம் குறைபாடுள்ளது, இஸ்லாமிய சட்டம் தான் உயர்ந்தது என்று ஓயாமல் சொல்லிக்கொள்ளும் நீங்கள், எப்படி இப்போது மட்டும் அவசியம் ஏற்படும்போது திடீரென்று இஸ்லாமிய சட்டத்தோடு, காபிர்களின் சட்டத்தை சம்மந்தப்படுத்தி பேசுகிறீர்கள் என்ற பொருளில் சொன்னேனே தவிர, நீங்கள் நினைப்பது போல் அல்ல.

 


அபூமுஹை அவர்கள் எழுதியது:

தேசத் துரோகம்

அதாவது, இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்துவதும், இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்கு விற்பதும் தேசத் துரோகம். என்ற சட்டம் காஃபிர்களால் இயற்றப்பட்டது. அதனால் முஸ்லிம்கள் இதை உதாரணம் காட்டிப் பேசுவது சந்தர்ப்பவாதம் என்று இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் சொல்கின்றனர். இவர்களின் வாதம் தவறானது. இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்தக்கூடாது, இராணுவ இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரிவிக்கக்கூடாது என மறைமுகமாக அல்ல, நேரடியாகவே இஸ்லாமும் கண்டிக்கிறது.

இஸ்லாம் இராணுவ சட்டத்தை இயற்றவில்லை என்று நான் சொல்லவே இல்லையே, உங்களுக்கு மட்டும் இப்படி புதுமையாக தெரிகின்றது.

என் கட்டுரையை சரியாக படித்துப்பாருங்கள், எதை நான் சந்தர்ப்பவாதம் என்று சொல்கிறேன் என்று புரியும். அதாவது, மதத்தை மாறுபவனுக்கு மரண தண்டனை இஸ்லாமில் உள்ளதால், காபிர்களின் சட்டத்தை உதாரணம் காட்டும் நீங்கள், மற்ற இஸ்லாமிய சட்டத்தோடு காபிர்களின் கட்டத்தை ஒப்பிட்டுப்பேச தயாரா? என்று கேட்டேன் அவ்வளவு தான்.

 

அபூமுஹை அவர்கள் எழுதியது:

இதைப் பார்ப்பதற்கு முன்,

உலகில் எல்லா நாடுகளும் தன் நாட்டின் தகுதிக்கேற்றவாறு இராணுவம் வைத்திருக்கும். இதற்கு முஸ்லிம் நாடுகள், காஃபிர் நாடுகள் என்ற விதிவிலக்கு எதுவுமில்லை. எதிரி நாட்டுடன் சண்டையிட நேர்ந்தால் நட்பு நாட்டின் இராணுவ உதவியை நாடுவதுண்டு. இதற்கும் காஃபிர் நாடுகள், முஸ்லிம் நாடுகள் என்ற வேற்றுமை இல்லை!

இராணுவத்தில் பணியாற்றும் ஒரு சாதாரண போராளியும், வெளிப்படுத்தக்கூடாத இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தினால் அது தேசத்துக்கே ஊறு விளைவிக்கும் தேசத் துரோகம் என்பதில் எந்த நாட்டின் இராணுவச் சட்டத்திலும் மாற்றுக் கருத்து இல்லை. அது காஃபிர் நாடாகவோ, முஸ்லிம் நாடாகவோ இருந்தாலும் சரியே, இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்துவது தேசத் துரோகம் என்றே இஸ்லாமும் கூறுகிறது.
.....
.....
.....


தேசத்துரோகத்திற்கு மரண தண்டனை கொடுப்பது தவறு என்று நான் எழுதவில்லை, தேசத்துரோகத்திற்கு இஸ்லாமிய சட்டமோ, அல்லது காபிர் நாடுகளின் சட்டமோ, மரண தண்டனை விதிப்பது தவறானது என்று கூட‌ நான் எழுதவில்லை.

ஒரு மனிதன் மதத்தை மாற்றிக்கொள்ளும்போது, அவனுக்கு மரண தண்டனை சரியா? என்பது தான் என் கேள்வி. மற்றும் மதத்தை மாற்றுபவனுக்கும், தேசத்துரோகம் செய்பனையும் ஏன் சம்மந்தப்படுத்துகிறார், ஜாகிர் நாயக் அவர்கள் என்பது தான் என் கேள்வி, அவ்வளவே.

 

அபூமுஹை அவர்கள் எழுதியது:

மேலும், இராணுவச் சட்டங்கள் காஃபிர்கள் இயற்றியது என்று தவறாக வாதமெழுப்பும் பிற மத நண்பர்களின் கவனத்திற்கு,


இராணுவம் மற்றும் தேசத்துரோகம் சம்மந்தப்பட்ட சட்டங்கள் காபிர் நாடுகள் தான் இயற்றினார்கள் என்று எங்கே நான் சொல்லியுள்ளேன்? ஏன் நான் எழுதிய கட்டுரையின் "பாதையை மாற்றி பயணத்தை" திசை திருப்ப பார்க்கிறீர்கள்?


அபூமுஹை அவர்கள் எழுதியது:

இராணுவ இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துவது தேசத் துரோகம் மட்டுமல்ல, இஸ்லாமிய ஆட்சியின் இராணுவப் போர் நடவடிக்கைகளை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துபவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி வேறு மதத்தைத் தழுவி விட்டாரோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்திவிடும் என்பதை ஹாத்திப் (ரலி) அவர்களின் வாக்கு மூலத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

எனவே, இஸ்லாமிய ஆட்சி என்று அறிவித்துக்கொண்ட முஸ்லிம் நாடுகளிலும் இராணுவம் உண்டு. அந்த இராணுவத்திற்கும் இஸ்லாமிய சட்டத் திட்டங்களைக் கடைபிடிக்கும் விதிகள் உண்டு. அதனால் காஃபிர்களின் சட்டத்தோடு இஸ்லாமிய சட்டம் கலந்ததாகச் சொல்வது வெறும் கற்பனை.

(தேசத் துரோகம் என்பதற்கு வேறு சில அளவுகோலையும் வைத்துள்ளனர் அவற்றையும் அடுத்துப் பார்ப்போம்)

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை
 

இஸ்லாமிய நாடுகளுக்கு தனியான இராணுவம் இருக்காது என்று நான் சொல்லவில்லை, அப்படி இருக்கும் இராணுவத்திற்கு தனியான இஸ்லாமிய சட்டங்கள் இருக்காது என்று கூட நான் சொல்லவில்லை.

நான் எழுதிய கட்டுரையின் பயணமெல்லாம், ஒரு மார்க்கத்தில் ஒரு குற்றத்திற்கு கொடுக்கும் தண்டனையை மற்ற மார்கத்தோடு அல்லது நாடுகளின் சட்டத்தோடு சம்மந்தப்படுத்திப் பேசும் போது, அதே குற்றத்தை ஒப்பிடவேண்டுமே ஒழிய, தலைக்கும் காலுக்கும் முடி போடக்கூடாது.

இஸ்லாமில் திருட்டிற்கு உள்ள தண்டனையை நியாயப்படுத்த நாம் முயற்சி எடுக்கும் போது, நாம் என்ன செய்யவேண்டும்? மற்ற காபிர்களின் சட்டத்தில் திருட்டிற்கு என்ன தண்டனை உண்டு என்று பார்த்து அதோடு ஒப்பிட்டால், மக்களுக்கு நன்றாக புரியும். ஒரே குற்றத்திற்கு இரண்டு மார்க்கங்களில் உள்ள தண்டனைகளை ஒப்பிட்டு பார்த்தால், நியாயமானதாக இருக்கும்.

அது போல, இஸ்லாமில் "மத மாற்றத்திற்கு" கொடுக்கும் தண்டனையை நியாயப்படுத்த விரும்பினால், மற்ற நாடுகளில் "மத மாற்றத்திற்கு" என்ன தண்டனை உண்டு என்பதை கண்டுபிடித்து ஒப்பிடவேண்டும். அதை விட்டுவிட்டு, காபிர் நாடுகளில் "எந்த குற்றத்திற்கு மரண தண்டனை" உண்டு என்று கண்டுபிடித்து அதோடு ஒப்பிட்டால் அது எப்படி சரியாக இருக்கும் என்று தான் நான் கேட்டேன்.

உடன்கட்டை ஏறுதலும், இஸ்லாமிய மத மாற்ற தண்டனையும்:

ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன், இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த "உடன்கட்டை ஏறுதல்" என்ற பழக்கம் ஒரு சட்டமாக இந்தியாவில் இன்று அமுலில் உள்ளது என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.

உடன் கட்டை ஏறுதல் என்ற சட்டம் சரியானதா? கணவன் மரித்துவிட்டால் அப்பெண்ணுக்கு மறுமனத்திற்கு வாய்ப்பு அளிக்கவேண்டுமே ஒழிய, இப்படி சாகடிக்கலாமா? என்று நீங்கள் கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

இதற்கு ஒரு இந்து அறிஞர் கீழ்கண்டவாறு பதில் சொல்கிறார் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்:

பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளில் "ஒரு மனிதன் இஸ்லாமைவிட்டு வெளியேறினால், அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது, அதுபோல, ஒரு பெண்ணுக்கு தன் கணவன் மறித்துவிட்டால், அவளுக்கு இந்து தர்மப்படி மரண தண்டனை தரவேண்டும், அதாவது கணவனோடு அவளையும் எரித்து கொன்றுவிடவேண்டும். தன் கணவன் மரித்துவிட்டால் அப்பெண் வேறு ஒரு ஆணை மறு திருமணம் செய்துக்கொண்டால் அது மரித்த கணவனுக்கு செய்யும் துரோகம் ஆகும், எனவே, இது நியாயமான தண்டனைத் தான்."

இதை படித்தவுடன் உங்களுக்கு சிரிப்பு வந்து இருக்கும், உடன் கட்டை ஏறுதலுக்கும், மதமாற்றத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கத்தோன்றும். இந்த உதாரணத்தில் குற்றம் ஒப்பிடப்படவில்லை, ஆனால், தண்டனை ஒப்பிடப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், கணவன் மரித்துவிடுவது என்பது குற்றமே இல்லை. அது போல, மதத்தை மாற்றிக்கொள்வது குற்றமே இல்லை.  இந்த உதாரணம் போலத்தான் ஜாகிர் நாயக் அவர்களும் உதாரணத்தைச் சொன்னார் என்று நான் குறிப்பிட்டேன்.
 
எனவே, அருமை நண்பர் அபூமுஹை அவர்களே, முதலில் நான் சொன்னதை முழுவதும் படித்து  புரிந்துக்கொண்டு எழுதுங்கள்.

யாருக்கு பதில் அல்லது யாருடைய கட்டுரைக்கு பதில் எழுதுகிறீர்கள், அபூ முஹை அவர்களே:

என் கட்டுரையைப் பற்றி பதிலோ விமர்சனமோ எழுதினால், அதன் தொடுப்பு தரவேண்டுமென்று, நான் ஏற்கனவே என் முதல் கட்டுரையில் சொல்லியுள்ளேன்.

நீங்கள் ஒன்றும் என்னைப்போல நேற்று பொழிந்த மழையில் முளைத்த காலான் அல்ல. உங்களுக்கு இணையத்தில் எப்படி கட்டுரையை எழுதவேண்டும் என்ற எல்லா விவரங்களும் தெரியும், இப்படி தெரிந்து இருந்தும், ஏன் என் வரிகளுக்கு பதில் அளிக்கும் போது, என் கட்டுரையின் தொடுப்பை தருவதில்லை.

எங்கள் கட்டுரைகளை படித்தால், இஸ்லாமியர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்ற பயமா? அப்படி பயம் இல்லையானால் ஏன் தொடுப்புக்களை தருவதில்லை? எனக்கு பதில் அளிக்கும் போது, என் வரிகளை விமர்சிக்கும் போது, என் கட்டுரை வெளியாகும் ஒரு தளத்தின் தொடுப்பையும் கொடுக்காமல் பதில் எழுதுவது என்ன நாகரீகம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இனி என் எல்லா பதில்களில் இந்த வரிகள் தொடரும் என்று சொல்லிக்கொள்கிறேன்.

முடிவுரை: நான் எந்த இடத்தில் "காபிர்கள் தான் அரசியல், ஆட்சி, இராணுவம் பற்றிய சட்டங்களை இயற்றினார்கள், இஸ்லாமில் இப்படிப்பட்ட சட்டமில்லை, அல்லது இஸ்லாமோடு இப்படி ஒப்பிடக்கூடாது என்றுச் சொன்னேன்" என்பதை தயவு செய்து தெரிவியுங்கள்.

ஒரே குற்றத்தை(தண்டனைகளை அல்ல) இரண்டு மார்க்கங்களிலும் ஒப்பிட நீங்கள் தயாரா? உங்கள் ஷரியா சட்டம் மற்ற காபிர்கள் சட்டத்தைவிட எவ்விதத்தில் உயர்ந்தது, சமுதாயத்திற்கு ஏற்றது என்று ஒப்பிட்டு கட்டுரை எழுதுவீர்களானால், மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

 

http://isakoran.blogspot.com/2008/05/blog-post.html